Ad Code

Responsive Advertisement

எஸ்.எஸ்.எல்.சி கல்​வித் தகு​தியை ​ ஆக.19 வரை பள்​ளி​யில் பதிவு செய்​ய​லாம்​

எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவ,​​ மாண​வி​யர் தங்​கள் கல்வி நிறு​வ​னங்​க​ளில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்​குள் வேலை​வாய்ப்​புப் பதிவு செய்து கொள்​ள​லாம்.​ ​எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்​சிப் பெற்​ற​வர்​க​ளுக்​குப் பள்​ளி​க​ளில் மதிப்​பெண் சான்று வழங்​கப்​பட்டு,​​ வேலை​வாய்ப்​புப் பதிவு செய்​யும் பணி ஆக.5ஆம் தேதி தொடங்கி நடை​பெ​று​கி​றது.​

ஆதார் அட்டை எண்,​​ குடும்ப அட்டை,​​ செல்​லி​டப்​பேசி எண்,​​ மின்​னஞ்​சல் முக​வரி ஆகி​ய​வற்​று​டன் மாண​வர்​கள் ஆக.19ஆம் தேதிக்​குள் தங்​கள் பள்​ளிக்​குச் சென்று,​​ வேலை​வாய்ப்​புப் பதிவு செய்து கொள்​ள​லாம்.​ இணை​ய​த​ளத்​தி​லும் பதிவு செய்து கொள்​ள​லாம்.​

ஆக.5ஆம் தேதி முதல் ஆக.19ஆம் தேதி வரை​யி​லான காலத்​தில் பதிவு செய்​யும் மாண​வர்​க​ளுக்கு ஆக.​ 5ஆம் தேதி பதிவு மூப்பு தேதி​யாக வழங்​கப்​ப​டும் என வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement