தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றுவதை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவபாலமுருகன் வாதிடும்போது, தமிழகத்தில் கடந்த 22 வருடங்களாக 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதனால் பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கு மருத்துக் கல்வி படிக்க தகுதியான மதிப்பெண் இருந்தும் இடம் கிடைக்காத சூழல் உண்டாகிறது. பாதிக்கப்படும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன்பின் கல்லூரிகளில் சேர்வது சில வருடங்களாக நடக்கிறது. எனவே மனுதாரரான மாணவர்களுக்கு இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 17ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் அன்று வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை