Ad Code

Responsive Advertisement

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர்நலத் துறை சார்பில், அரசின் 28 விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான மாநில தேர்வு நாளை (ஜூலை 3) காலை 8 மணிக்கு நடத்தப்படுகிறது. தேர்வு நடைபெறும் இடங்கள்:ரேஸ்கோர்ஸ், மதுரை: 

ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான தடகளம், ேஹண்ட்பால், டெனிகாய்ட், இறகுபந்து மற்றும் நீச்சல் விளையாட்டு, பிளஸ் 1 மாணவர்களுக்கான கூடைபந்து விளையாட்டு. ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவி களுக்கான தடகளம், இறகுபந்து, ஹண்ட்பால்,வாலிபால், டெனிகாய்ட், கபடி தேர்வு. சீதக்காதி சேதுபதி அரங்கு, கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம்: ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு கிரிக்கெட் தேர்வு. அன்னை சத்யா அரங்கு, கணபதி நகர், தஞ்சாவூர்: ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவிகளுக்கு பளுதுாக்குதல் தேர்வு. 

நேரு விளையாட்டு அரங்கு, சென்னை: ஏழு முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1மாணவ, மாணவிகளுக்கு வாள்சண்டை தேர்வு.விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வு நாளன்று ரூ.10கட்டணத்துடன் ஒப்படைக்க வேண்டும். இத்தகவலை மாவட்ட விளையாட்டுஅலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement