அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான கொள்ளுப் பொடி திமர்தல் சிகிச்சை சென்னை அரசு சித்த மருத்துவமனையில் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பாளையங்கோட்டை: இந்த சிகிச்சையானது பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் அளிக்கப்படுகிறது. பிள்ளைப் பிணி மருத்துவத் துறையில் (குழந்தைகள் சிகிச்சை) இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிகிச்சையை சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
6 வயதுக்குள்: அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆறு வயதுக்கு முன்பே இந்தச் சிகிச்சையை அளிக்கத் தொடங்குவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். 12 வயது வரையுள்ள அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு இந்தச் சிகிச்சை நல்ல முன்னேறத்தைக் கொடுக்கும். இதுகுறித்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது:
இந்தச் சிகிச்சையின்படி கொள்ளுப் பொடியைக் கொண்டு உடலில் உள்ள 108 வர்ம புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும். மனிதர்களின் தோல்களில் பல்வேறு நுண்ணிய துளைகள், ரத்த நாளங்கள் உள்ளன. இந்தச் சிகிச்சையின் மூலம் தோல்களில் உள்ள துளைகளின் வழியே ரத்தம் வரை இந்த மருந்தின் தன்மை போய்ச் சேரும். அதனால், ரத்த ஓட்டம் சீராகும். மேலும், இந்தச் சிகிச்சை மூளையின் வளர்ச்சியைத் தூண்டும் திறன் வாய்ந்தது.
சென்னை அரசு சித்த மருத்துவமனையில் இந்தச் சிகிச்சை தொடங்கப்பட்டால் அதன்மூலம் அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகள் பலர் பயனடைவர். எனவே, பாளையங்கோட்டையைப் போலவே சென்னையிலும் இந்தச் சிகிச்சை தொடங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை