Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க இன்று கடைசி வாய்ப்பு

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் விக்ரம் கபூர் வெளியிட்ட அறிவிப்பு: தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி உறுதிப்படுத்தும் திட்டம் 2015 மார்ச்  முதல் சென்னை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று வாக்காளர்களின் ஆதார் அட்டை எண், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் விவரங்களைச் சேகரித்து வருகிறார்கள்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் சேர்க்கும் இத்திட்டம் தொடர்பாக இன்று (மே 24) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ள இறுதி கட்ட சிறப்பு முகாமில் வாக்காளர்கள் நேரில் ஆஜராகி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் இன்று நடைபெற உள்ள இறுதி கட்ட சிறப்பு முகாம் வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement