Ad Code

Responsive Advertisement

டி.என்.பி.எஸ்.சி., 'தோட்டக்கலை அலுவலர் ரிசல்ட்' வெளியீடு

தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் பணிக்கான தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான, 183 காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, 2014 மார்ச் 16ல் நடந்தது. அதில், 659 தேர்வர்கள் பங்கேற்றனர். விதிகளைப் பின்பற்றி, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட, 605 பேர்களில் இருந்து நேர்காணல் தேர்விற்கு, தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 361 பேரின் பதிவெண் பட்டியல் தேர்வாணைய வலைதளம், www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு ஜூன், 1 முதல், 4ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement