தமிழக அரசுத் துறைகளில், 18 வகையான குரூப்-2 பதவிக்கான, 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 (நேர்முக தேர்வு) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 18 வகை பதவிக்கான, 1,241 காலியிடங்கள் நிரப்பப்படும்.மே 29ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வங்கி மற்றும் தபால் அலுவலகம் மூலம், ஜூன் 1ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஜூலை 26ம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடக்கிறது. இதில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திலிருந்து கேட்கப்படும்.தேர்வில் பங்கேற்க, ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழகம் முழுவதும், 114 மையங்களில் தேர்வு நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpscexams.net என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம், www.tnpsc gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சந்தேகங்கள் இருப்பின், contacttnpsc@gmail.com என்ற முகவரி அல்லது, 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை