Ad Code

Responsive Advertisement

பாலிடெக்னிக் 2ம் ஆண்டு சேர்க்கைமே 4ல் விண்ணப்பம் விற்பனை

பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு சேருவதற்கான, விண்ணப்பப் படிவங்கள், மே, 4ம் தேதி முதல், விற்பனை செய்யப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டு, ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள, 41 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக, இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேரலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சென்னை, தரமணியில் உள்ள, பாலிடெக்னிக் கல்லுாரியில் நடத்தப்படும், இரண்டரை ஆண்டு, செயற்கை அவயங்கள் மற்றும் முட நீக்கியியல் பட்டயப் படிப்பில், முதலாம் ஆண்டில் சேரலாம்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவியர், சென்னை, தரமணியில் உள்ள, டாக்டர் தர்மாம்பாள் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடத்தப்படும், ஓராண்டு ஒப்பனைக் கலை பட்டயப் படிப்பில் சேரலாம்.
இதற்கான விண்ணப்பங்களை, மாணவ, மாணவியர், தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மே, 4ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். 
விண்ணப்பப் படிவத்தின் விலை, 150 ரூபாய். தமிழகத்தை சேர்ந்த, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், விண்ணப்பத்தை இலவசமாகப் பெற, ஜாதி சான்றிதழ், சான்றொப்பமிட்ட நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பத்தை, www.tndte.com என்ற இணையதளத்தில் இருந்தும், மே, 4ம் தேதி முதல், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அந்தந்த பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மே, 22ம் தேதிக்குள், வந்து சேர வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement