தமிழகத்திலுள்ள, 4,000க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளை, ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக, குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இப்பள்ளிகள், மாணவ, மாணவியருக்கான எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், காற்றோட்டமான இட வசதி, தேவையான வகுப்பறை, கழிப்பறை வசதி, பாதுகாப்பு முன்னேற்பாடு மற்றும் அவசர வழி போன்ற வசதிகள் இன்றி செயல்படுகின்றன.
அங்கீகாரம் பெற,
* பள்ளி இடம் சொந்தமாகவோ அல்லது 30 ஆண்டுகள் குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தத்துடன் இருக்க வேண்டும்.
* சுகாதாரம், தீயணைப்புத் துறை, உள்ளாட்சி போன்றவற்றில் இருந்து, பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும்.
* அரசின் வழிகாட்டுதல் படி, தேவையான அளவுக்கு ஒரே இடத்தில் நிலப்பரப்பு மற்றும் தரமான, கான்கிரீட் கட்டடங்கள் இருக்க வேண்டும்.
* அங்கீகாரம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கல்வித் துறை ஆய்வாளர்களால் நேரடி ஆய்வு நடத்தி புதுப்பிக்கப்படும்.
ஆனால், அங்கீகாரம் இல்லாத பிரைமரி பள்ளிகளின் மாற்றுச் சான்றிதழ்கள் ஏற்றுக்
கொள்ளப்பட்டு, மாணவர்கள், மற்ற பள்ளிகளில், இடைநிலை வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். தேர்வுகளுக்கும் அனுமதி தரப்படுகிறது. அதனால், விதிமுறைகளைப் பற்றி கவலைப்படாமல், இந்தப் பள்ளிகள் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்தி, கட்டண வசூல் வேட்டை நடத்துகின்றன. இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல, அசம்பாவிதம் நடந்து விடக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை, முன்னெச்சரிக்கையாக ஆலோசித்து வருகிறது. மோசமான பள்ளிகளை மூட, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியல் தயாரித்து, அவற்றை தனித்தனியாக ஆய்வு நடத்த, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓரளவுக்கு இட வசதி மற்றும் பாதுகாப்பு கொண்ட பள்ளிகளின் பட்டியல், தனியாகத் தயாரிக்கப்படுகிறது. இப்பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து முடிவு செய்ய, குழு அமைக்கப்படும். இந்த குழு, பள்ளிகளை ஆய்வு செய்து, மூடுவதா அல்லது அங்கீகாரம் வழங்குவதா என்பதை முடிவு செய்யும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை