பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ கல்வி பயில வசதியாக சென்னை லிம்ரா எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம், மே 3ம் தேதி, தமிழகத்தில் 16 பள்ளி மையங்களில், மருத்துவக் கல்வி திறனறிதல் தேர்வை பிற்பகல் 2.30 முதல் 4.30 வரை நடத்துகிறது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நேரே தேர்வு நடைபெறும் மையத்திற்கு, ஒரு மணி நேரம் முன்னதாக சென்று, தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்து, பின்னர் தேர்வு எழுதலாம். எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இவர்கள், தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு, பிளஸ் 2 ஹால் டிக்கட் நகல் மற்றும் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் உடன் கொண்டு செல்ல வேண்டும். அனைத்திந்திய நுழைவுத் தேர்வு மாதிரியில், 120 கேள்விகளுக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதில் அளிக்க வேண்டும்.
இத்தேர்வில் முதல் 10 மதிப்பெண் பெறுபவர்களுக்கு, விருது, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை