தமிழகத்தில் 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது ஏன் என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 14 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன. இந்த வட்டாரங்கள் பெண் கல்வியில் பின்தங்கியுள்ளதற்கான சமூக, பொருளாதாரக் காரணங்கள் என்ன, குடியிருப்புகளுக்கு அருகில் பள்ளிகள் உள்ளதா, மாணவிகள் படிப்பதற்கான அடிப்படை வசதிகள் உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதற்காக தேசிய கல்வி திட்டமிடல்- நிர்வாகப் பல்கலைக்கழகம், தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஆய்வு நடத்தப்படும்.
இந்த ஆய்வின் அடிப்படையில், இந்த வட்டாரங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை