'பிளஸ் 2 பொருளியல் தேர்வில், தவறாக கேட்கப்பட்ட இரு வினாக்களுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க, மதுரை மாவட்ட தலைவர் சந்திரன், மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த மார்ச் 27ம் தேதி, பிளஸ் 2 பொருளியல் தேர்வு நடந்தது. பிரிவு, 'ஏ'யில் (தமிழ் வழி), இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் (எண்: 18, 20), பதிலளிக்க முடியாத வகையில், தவறாக கேட்கப்பட்டு உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தார். நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்', நேற்று மனுவை விசாரித்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், பிரிவு 'ஏ'யில் (தமிழ் வழி) வினாக்கள், 18, 20 ஆகியவை தவறாக இடம் பெற்றுள்ளன; இவ்வினாக்களுக்கு விடையளித்த மாணவர்களுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்கப்படும்' என்றார். இதை பதிவு செய்த நீதிபதி கள், வழக்கை முடித்து வைத்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை