Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை-இன் சார்பில் மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நேர்முக உதவியாளரிடம் நேரில் மனு

18/03/2015 அன்று அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்களின் தலைமையில்  மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன், மாநிலப்  பொருளாளர் திரு.இளஞ்செழியன், மாநிலத் துணைத் தலைவர்கள் திரு.லட்சமணன், திரு.சிவாஜி , மாநில இணைபொதுச்  செயலாளர்   திரு கிருஷ்ண மூர்த்தி, மாநில சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில்  உள்ளிட்ட அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன்  மாநில நிர்வாகிகள்  கொண்ட குழு,     மாண்புமிகு மக்களின்  முதல்வர்  இதயதெய்வம் புரட்சித்தலைவி  "அம்மா"  அவர்களின்  போயஸ்    தோட்டதிற்கு  சென்றனர். 


அச்சமயம் 10/03/2015 அன்று  மாண்புமிகு முதலமைச்சர் திரு.பன்னீர்செல்வம் அவர்களிடமும், மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அவர்களிடமும், மாண்புமிகு வருவாய்துறை   அமைச்சர்  அவர்களிடமும், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களிடம்  கோரிக்கை மனு அளித்ததன் தொடர்ச்சியாக   அனைத்திந்திய ஆசிரியர் பேரவை  -இன் சார்பில்   மனுவை  புரட்சித்தலைவி   "அம்மா"  அவர்களின் இல்லத்தில் அவரின் நேர்முக  உதவியாளரிடம்  பேரவை - இன் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் நேரில் அவர்கள் அளித்தார்.      

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement