Ad Code

Responsive Advertisement

மார்ச் 1ல் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு; 2ல் பிளஸ் 2 தேர்வு; பள்ளிகளில் சிறப்பு பயிற்சி தீவிரம்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதியும் துவங்குகின்றன. கோவை மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 1ம் தேதி ஆங்கில விருப்ப பாடமும், 4ம் தேதி வரலாறு, 8ம் தேதி அரசியல் அறிவியல், 11 ம் தேதி வேதியியல், 13ம் தேதி விருப்ப பாடம், 20ம் தேதி கணிதம், 22ல் கம்ப்யூட்டர் சயின்ஸ், 26ல் பொருளாதாரம், 29ல் புவியியல், ஏப்ரல் 17ல் ஓவியம் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கின்றன.அதே போல், பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதி மொழித்தேர்வுகள், 3ல் கணிதம், 10ல் அறிவியல், 14ல் சமூக அறிவியல், 19ல் ஆட்டோ மொபைல் டெக்னாலஜி உள்ளிட்ட தேர்வுகள் நடக்கிறது.

கோவை மாவட்டத்தில், 77 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், 20 பள்ளிகளில் மட்டுமே , 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செயல்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளில், 300 மாணவர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாணவர்களுக்கான, சிறப்பு பயிற்சிகள் பள்ளிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நேஷனல் மாடல் பள்ளி தலைமையாசிரியை கீதா கூறுகையில், ''பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

''புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுதல் என்பது மாணவர்களின் சிந்தனையை தூண்டும் பிரிவு; இப்பிரிவுகளுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பிரிவுக்கு, 10 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., மாணவர்களை பொறுத்தவரை, 60 மதிப்பெணகளுக்கு மட்டுமே தேர்வெழுதுகின்றனர். மீதமுள்ள, 40 மதிப்பெண்கள் செயல்வழி கல்விக்கு வழங்கப்படுகின்றன,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement