தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவு தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 12 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ மேற்படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 12 அரசு மருத்துவ கல்லூரிகளின் மூலம் இந்த ஆண்டு எம்டி, எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு 1,100 இடங்களும், எம்டிஎஸ் படிப்பிற்கு 40 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீடு போக மீதமுள்ள 595 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதில், எம்டி, எம்எஸ் படிப்பில் சேருவதற்காக 8,600 பேரும், எம்டிஎஸ் படிப்பிற்காக 1,157 பேரும் என மொத்தம் 9,700 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நுழைவு தேர்வு அடுத்த மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏற்கனவே ஹால்டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை