Ad Code

Responsive Advertisement

தேர்வு எழுத வந்த மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவர்களை 'துணை நடிகர்களாக' ஆக்கி சினிமா ஷூட்டிங் நேற்று நடந்தது. இதை பார்த்த பெற்றோர் அதிருப்தியடைந்தனர். 

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே தெக்கூரில் எஸ்.வி.கலாசாலை பள்ளி உள்ளது. விக்ரம் பிரபு நடிக்கும் 'வாகா' படத்திற்கான படப்பிடிப்பு, நேற்று காலை இப் பள்ளி வளாகத்தில் நடந்தது. மதிதேர்வு எழுத வந்த பிளஸ் 1 பள்ளி மாணவர்களை துணைநடிகர்கள் சிலருடன் சீருடையில் உறுதிமொழி ஏற்கும் காட்சி படமாக்கப்பட்டது. நேற்று பிளஸ்1 ரிவிஷன் தேர்வு, 10ம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வு நடக்கும் நிலையில், பள்ளி வளாகத்தினுள் படப்பிடிப்பு நடத்த அனுமதித்தது, அதில் மாணவர்களை பங்கேற்க செய்தது பெற்றோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர்களும், பிற மாணவர்களும் தேர்வுக்கு படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். இன்றும் இப்பள்ளியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement