திட்டக்குடி தாலுகாவில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் மாத சம்பளம் கிடைக்காததால் கடும் அதிருப்தியடைந்தனர். திட்டக்குடி தாலுகாவில் ஆசிரியர்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதத்தின் கடைசி நாளன்று சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். இதற்காக சம்பள பட்டியல் தயாரிக்கப்பட்டு திட்டக்குடி கிளை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின் கருவூலத்திலிருந்து திட்டக்குடி இந்தியன் வங்கிக்கு அனுப்பப்பட்டு ஆசிரியர்களின் வங்கி கணக்கிற்கு சம்பளம் ஈ.சி.எஸ்., செய்யப்படும்.அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் நேற்று மாலை வரை கிடைக்காததால் ஆசிரியர்கள் கடும்அதிருப்தியடைந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் கருவூலம் மற்றும் வங்கி அதிகாரிகளை விசாரித்த போது ஒருவரை மற்றொருவர் காரணம் கூறியதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "கருவூலத்திலிருந்து வெற்று சி.டி., அனுப்பியதால், அதை மீண்டும் திருத்தித் தர கருவூலத்திற்கு அனுப்பி பெற்றதால் தாமதமானதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அலட்சியமாக செயல்பட்ட கருவூல அதிகாரிகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்' என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை