Ad Code

Responsive Advertisement

அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு: 18 லட்சம் பேர் பயனடைவர்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கடந்த ஜூலை, 1ம் தேதி முதல், அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும், ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசுக்கு இணையாக, அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தவர் ஜெயலலிதா.அவரது வழியில், தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி, கடந்த ஜூலை, 1ம் தேதி முதல், அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம், அதாவது 100 சதவீதத்தில் இருந்து, 107 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி வழங்கப்படும், அனைவருக்கும் பொருந்தும்.இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என, 18 லட்சம் பேர் பயன் பெறுவர்.இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை, 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, ரொக்கமாக வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு, 1,558.97 கோடி ரூபாய், செலவு ஏற்படும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement