வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தில் சேர, பட்டதாரி இளைஞர்களிடம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசின், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு ஐ.சி.டி., அகாடமி ஆகியவற்றின் சார்பில், பட்டதாரி இளைஞர்கள், 2,000 பேருக்கு, வங்கித் துறை, நிதியியல், சேவை, காப்பீட்டுத் துறை ஆகியவற்றில், குறுகிய காலத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், 150 மணி நேர பயிற்சி வகுப்பாக நடைபெற உள்ளது. இதில் முழுமையாக பங்கேற்று, பயிற்சியில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுவோருக்கு, வேலைவாய்ப்பு உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.கடந்த ஆண்டு, பி.ஏ., பி.காம், பி.பி.ஏ., பி.பி.எம்., பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி., ஆகிய பட்டம் பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், www.ictat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை