அனைத்துப் பள்ளிகளிலும் அக்டோபர் 2 முதல் 8-ஆம் தேதி வரை "கொடுத்து மகிழும் வாரம்' கடைப்பிடிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மனதைக் கவர்ந்த ஆசிரியர் பணியினைப் பாராட்டி சிறு கட்டுரையை எழுதுதல், இயலாதவர்களுக்கு பரிசு வழங்குதல், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குக் கற்பித்தல், கைவினைப்பொருள் உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்குதல், சாலையைக் கடக்க பிறருக்கு உதவுவதல் என்பன உள்ளிட்ட 18 வகையான நடைமுறைகளை இந்த ஒரு வார காலத்தில் பின்பற்ற பள்ளி கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியிருப்பதோடு, அதுதொடர்பான விவரங்களை இயக்குநருக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை