தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, உச்ச நீதிமன்றம்
தடை விதித்துள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து, இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி தருவதில் தாமதம் ஏற்பட்டது.
கல்லூரிகளில், தேவைக்கேற்ப கட்டமைப்புகளை மாற்றியமைக்கவும், வசதிகளை ஏற்படுத்தவும் கால அவகாசம் அளித்து, மாணவர் சேர்க்கைக் கான அனுமதி தர வேண்டும் என, சுய நிதி கல்லூரிகள் வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக, சுய நிதி கல்லூரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்த சுய நிதி கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஐந்து மருத்துவக் கல்லூரிகளில், 750 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை