''அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியில் தங்கிப் படிப்பவர்களுக்கு தலையணை, கம்பளி சட்டை, ரெயின் கோட் வழங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட
அறிவிப்புகள்:
கடலூர், நந்தனார் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் திருவள்ளூர், செவ்வாய்ப்பேட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இரு பொறியியல் கல்லூரிகள், 24.6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை ஆதிதிராவிடர் நல பள்ளி வளாகத்தில், 10 கோடி ரூபாய் செலவில், ஐ.டி.ஐ., அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, 4.93 கோடி ரூபாயில், உறையுடன் கூடிய தலையணை அளிக்கப்படும்.
மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியினர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு, 3.8 கோடி ரூபாய் செலவில், ரெயின்கோட் மற்றம் கம்பளி
சட்டை வழங்கப்படும்.
பி.எட்., மற்றும் ஆசிரியர் பயிற்சி தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி
அளிக்கப்படும். இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை