பொறியியல் கலந்தாய்வில் தினமும் 30 சதவீதம் பேர், அதாவது ஆயிரம் பேர் பங்கேற்பதில்லை என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது வால்பாறை தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படுமா என்று அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி காலியிடங்கள் அதிகளவில் உள்ளன. மாநிலத்தில் 2.88 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றில், அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் 2.11 லட்சமாகும். நடப்புக் கல்வியாண்டில் பொறியியல் கலந்தாய்வு, கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, அரசு ஒதுக்கீட்டில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வில் பங்கேற்க தினமும் 4 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. ஆனால், அதில் 30 சதவீதம் பேர் அதாவது ஆயிரம் பேர் கலந்தாய்வில் பங்கேற்பதில்லை. கலந்தாய்வில் பங்கேற்பதில் இருந்து அவர்களின் எண்ணங்கள் மாறி விடுகின்றன என்றார் அமைச்சர் பழனியப்பன்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை