ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தும் வரை, அந்த மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அதை வசூலிக்கக் கூடாது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
பேரவையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லி பாபு பேசியது:
தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தி வருவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.
ஆனால் பல கல்லூரிகள் ஆதி திராவிட மாணவர்களைக் கல்விக் கட்டணம் கட்டச் சொல்லி வலியுறுத்துகின்றன என்று கூறினார்.
அப்போது உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் குறுக்கிட்டுப் பேசியது:
தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பெறும் ஆதி திராவிடர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இந்த கட்டணத்தை அரசு செலுத்தும் வரை கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை