"இலவசத்திற்காக மக்கள் கையேந்தாத நிலை ஏற்பட வேண்டும் என்பது முதல்வர் ஜெயலலிதா கனவு," என, மதுரையில் இலவச பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.
மதுரை மாநகராட்சி 67 வது வார்டில் இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன் வழங்கும் விழாவிற்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. முஸ்லிம் சமுதாய மக்கள் கோரிக்கையை ஏற்று, உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்த ஜெ., கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கினார். அ.தி.மு.க.,வில் யார் தப்பு செய்தாலும் அவர்கள் தப்ப முடியாத நிலை உள்ளது. மக்கள் யாரும் இலவசத்திற்காக கையேந்தக் கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும் என்பது முதல்வரின் கனவு, என்றார். கலெக்டர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு திட்ட செயலாக்கத் துறை துணை கலெக்டர் கிரிஜாதேவி வரவேற்றார். டில்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை