தனியார் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத்தேர்வை கண்காணிக்க வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
தற்போது, அவர் தலைமையில் செயல்படும் உயர்கல்வி சேர்க்கை ஆணையம், புதுச்சேரியில் உள்ள சுயநிதி சிறுபான்மையினர் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களின் கீழ் செயல்படும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக நடைபெறும் நுழைவுத் தேர்வில், வல்லுனர்களை கொண்டு குழு அமைக்க வேண்டும்.
குறிப்பாக, புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர், ஜிப்மர் தன்னாட்சி நிறுவனத்தின் இயக்குனர், சுகாதாரத்துறை செயலாளர், புதுச்சேரி உயர் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி துறை இயக்குனர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.
கல்லூரிகள் சுட்டிக்காட்டிய உறுப்பினர்களை கொண்டு மாணவர்களை தேர்வு செய்தால் தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே தேர்வுத்தாளை தயார் செய்தல், விடைத்தாளை திருத்துதல், தேர்வை கண்காணித்தல், தேர்வு முடிகளை வெளியிடுதல் போன்றவற்றை, துறைகளை சேர்ந்த அதிகாரிகளை குழுவாக நியமித்து அந்த குழுவே செயல்பட வேண்டும்.
ஆனால் கண்துடைப்பிற்காக உயர்கல்வி சேர்க்கை குழு செயல்படுமானால், சுப்ரீம் கோர்ட் வகுத்த நெறிமுறைகள் அர்த்தமற்று போய்விடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை