கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கி.ராஜேந்திரன் கூறியதாவது: படிப்பில் சிறந்து விளங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் கல்வி அறக்கட்டளை வழங்கும், பரிசுத் தொகை, நடப்பு கல்வியாண்டில், ஏழு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கல்வி பயிற்சி தேவைப்படும், விசேஷ திறனாளி மாணவர் ஐந்து பேருக்கு, தலா, 5,000 ரூபாயும்; மீதத் தொகை, பட்ட மேற்படிப்பு மாணவருக்கு, 10 ஆயிரம்; பட்டப்படிப்பு மாணவருக்கு, 7,500; பாலிடெக்னிக் அல்லது பிளஸ் 2 மாணவருக்கு, 5,000 ரூபாய் என, வினியோகிக்கப்படும். உதவித்தொகை பெற விரும்புபவர்கள், மாணவரின் முழு விலாசத்துடன், ஐந்து ரூபாய் தபால் உறையை, 'நிர்வாக அறங்காவலர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை - 20' என்ற முகவரிக்கு, ஜூலை 15க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை