தெலங்கானா மாநிலத்தில், பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதியதில் 12 பள்ளி குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். மேடக் மாவட்டத்தில், மாசாய்ப்பேட்டையில் உள்ள ஆளில்லா லெவல் கிராஸிங்கைக் கடக்க முயன்ற பள்ளிப்பேருந்து மீது, வேகமாக வந்த ரயில் மோதியது.
இதில் பள்ளிப்பேருந்து தூக்கி வீசப்பட்டது. இந்தக் கோர விபத்தில், 12 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேருந்தில் 38 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள கோம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமைச்சர் ஜகதீஷ் ரெட்டி அந்த மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், அமைச்சர் ஹரிஷ்ராவ், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பள்ளிப்பேருந்து தூக்கி வீசப்பட்டது. இந்தக் கோர விபத்தில், 12 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேருந்தில் 38 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள கோம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமைச்சர் ஜகதீஷ் ரெட்டி அந்த மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், அமைச்சர் ஹரிஷ்ராவ், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை