தமிழ் பட்டதாரி ஆசிரியர் தர ஊதிய உயர்வாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்துவதால்
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தர ஊதியம் ஜனவரி2011ல் வெளியிடப்பட்டது. இதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் பட்டதாரிகள் உள்பட) தர ஊதியம் ரூ.4400ல் இருந்து ரூ.4600ஆக உயர்த்தி அரசாணை (எண்.23)வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சில பாட ஆசிரியர்கள் தங்களுக்கும் தர ஊதியம் உயர்த்த கோரிக்கைவிடுத்தனர்.
இதையடுத்து ஜுலை 2013ல் திருத்திய தர ஊதிய அரசாணை 263 வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் நிதித்துறையினர்1988ம் ஆண்டிற்கு முன் காலாவதியான தமிழ் பண்டிட் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். (1988ல் தமிழ் பண்டிட் என்ற சிறப்பாசிரியர் பட்டியலில் இருந்து பள்ளி உதவியாசிரியர் பின்னர் தமிழ் பட்டதாரி ஆசிரியர் என தமிழாசிரியர்கள் பெயர் மாற்றம் பெற்று பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தை பல ஆண்டுகளாக பெற்று வருகின்றனர்). இந்நிலையில் ஜுலை2013அரசாணையில் பயன்படுத்திய தமிழ் பண்டிட் என்ற வார்த்தையையடுத்து2011ஜனவரியில் தர ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது பொருந்தாது என கல்வித்துறை தெரிவித்தது. எனவே 2011ல் இருந்து பெற்ற ஊதிய உயர்வு தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ கூறுகையில், ஜுலை 2013ல் வெளியிடப்பட்ட ஆணையில் தமிழ் பண்டிட் என்ற வார்த்தை பயன்படுத்தியதை நீக்கி அரசாணை வெளியிட அரசுக்கு கோரிக்கைவிடுத்தோம். டிசம்பர்.2013ல் தமிழ் பட்டதாரி ஆசிரியர் என திருத்திய அரசாணை(எண்.434)வெளியிடப்பட்டது. ஆனால் இதையறியாமல் மாவட்ட கல்வித்துறையினர் நடந்துகொள்கின்றனர். அரசாணை.434ன்படி தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள்தான். அவர்கள் எந்த தொகையையும் திரும்ப செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை