Ad Code

Responsive Advertisement

கூடுதலாக சிறப்புப் பள்ளி திறக்க மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை: முதல்வருக்கு கடிதம்

 மாற்றுத் திறனாளிகளுக்காக கூடுதல் பள்ளிகள் திறப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

             தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங் கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா வுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

          தமிழகத்தில் பார்வையற்றோ ருக்கான சிறப்பு மேல்நிலைப் பள்ளிகள் சென்னை பூந்தமல்லி, திருச்சி ஆகிய 2 இடங்களில் மட்டுமே உள்ளன. இது போதுமான தல்ல. கூடுதலாக சிறப்புப் பள்ளி கள் திறக்கவேண்டும். மேலும், 10-ம் வகுப்புக்குப் பிறகு மேல்படிப்புக்காக சென்னைக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

            எனவே தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை உள்ள பார்வையற் றோர் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண் டும். தஞ்சாவூரில் உள்ள பார்வை யற்றோர் உயர்நிலைப் பள்ளியை இந்தக் கல்வியாண்டிலேயே மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். காது கேளாதோருக் கான மேல்நிலைப் பள்ளி தஞ்சா வூர், தருமபுரி ஆகிய 2 இடங்களில் மட்டுமே உள்ளன. இதுவும் போதுமானதல்ல. காஞ்சிபுரத்தில் இயங்கும் இருபாலருக்கான அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்க வேண்டும்.

கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு

                சென்னை மாநில கல்லூரியில் பி.காம்., பி.சி.ஏ. ஆகிய 2 சிறப்புப் பட்டப் படிப்புகள் காதுகேளாதோ ருக்காக நடத்தப்படுகிறது. தஞ்சை, தருமபுரி, கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளிலும் இதுபோல காதுகேளாதோருக்கான சிறப்புப் பட்டப் படிப்புப் பிரிவு தொடங்கப் பட வேண்டும். மாநிலக் கல்லூரி யில் இந்தக் கல்வியாண்டில் முது நிலைப் பட்டப் படிப்புகளையும் தொடங்க ஆவன செய்ய வேண் டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement