Wednesday, April 30, 2014
அரசு பள்ளி மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
உடுமலை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி மாணவியருக்கு, 2013 கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார சூழ்நிலையால், பெண்களின் கல்வி தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில், மாநில அரசு, பள்ளி கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் தகுதிப் பரிசுகள்
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /கிறுத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களில் 15 மாணவிகளில் முதல் 1000 பேருக்கும் அவர்களது மேற்படிப்பை தொடர்ந்து படித்தால் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.1500/- வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு தகுதிப்பரிசு வழங்கப்படுகிறது.
ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை
தமிழ்நாட்டில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள், முதுநிலை பட்டப்படிப்பு பயில இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.எட்., எம்.எல்., எம்.சி.ஏ., எம்.பில். ஆகிய பட்டப்படிப்புகளை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த உதவித் தொகை பெற எந்த ஊதிய வரம்பும் இல்லை. ஆனால், மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் 60 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் சாதாரண மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.120ம், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300ம் வழங்கப்படும்.
இந்திய மாணவர்களின் நிலை எப்படி? - விவரிக்கும் ஆய்வு
இந்திய மாணவர்கள், இன்னும் தங்கள் தாய்நாட்டின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
Youth Economics: Career Expectations Survey என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பை முடித்த, டில்லியின் 84% மாணவர்கள், தங்களின் பணி வாய்ப்புகளை சிறப்பாக்கிக் கொள்ள, இந்தியாவில் தொடர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர். வெறும் 16% பேர் மட்டுமே, பணியின் பொருட்டு வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர்.
உயர்கல்வியை தொடர்ந்து மேற்கொள்வதற்கான பொருளாதார சிக்கல்கள், அதிகரிக்கும் விலைவாசி மற்றும் குறைவான வேலை வாய்ப்புகள் ஆகிய சிக்கல்களை, இந்திய மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மொத்தம் 29% மாணவர்கள் மட்டுமே, இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டங்களை நிறைவுசெய்த பின்னர், மேற்படிப்பை மேற்கொள்ள நினைப்பவர்களாக இருக்கிறார்கள். மொத்தம் 55% மாணவர்கள், கூடிய விரைவில் ஒரு நல்ல பணியைப் பெற்று, அதன்மூலம் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றனர்.
தனியார் துறை பணிகள், அரசுத்துறை பணிகளோடு ஒப்பிடுகையில், பணி பாதுகாப்பு, சலுகைகள், நீடித்த தன்மை மற்றும் நிம்மதி ஆகிய விஷயங்களில் மிகவும் பின்தங்கியுள்ளன.
ஆனால், அதேசமயம், அதிக சம்பளம், எளிதான பதவி உயர்வு மற்றும் பணி சவால்கள் ஆகிய விஷயங்களில், அரசுப் பணிகளைவிட, தனியார் துறை பணிகள் அதிகம் மேம்பட்டு திகழ்கின்றன.
இந்த ஆய்வின் மூலம் தெரியவந்த சில முக்கிய தகவல்கள்
73% மாணவர்கள், பொருளாதார ரீதியாக தங்களின் பெற்றோரை சார்ந்துள்ளனர்.
19% மாணவர்கள், உதவித்தொகை திட்டங்களை சார்ந்துள்ளனர்.
8% மாணவர்கள், தங்களின் குடும்ப வணிகத்தை சார்ந்துள்ளனர்.
16% மாணவர்கள், தங்களின் அன்றாட கைச் செலவுகளுக்காக கடன் வாங்குகிறார்கள்.
3% மாணவர்கள், உணவு, உடை, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை தொடர்பாக, தங்களின் செலவினங்களை 35% வரை குறைத்துக் கொள்கிறார்கள்.
14% மாணவர்கள், பகுதிநேர பணி மற்றும் டியூஷன் ஆகியவற்றை தேர்வு செய்கிறார்கள்.
12% மாணவர்கள், தங்களின் முந்தைய சேமிப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.
5% மாணவர்கள், தாங்கள் பணவீக்கத்தின் எந்த பாதிப்பையும் உணரவில்லை என்று தெரிவித்தனர்.
அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள் ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள் ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்
ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’
ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்
ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்
TNTET - New weightage கணக்கிடும் முறை
TNTET - New weightage கணக்கிடும் முறை
தாள் இரண்டுக்கு கணக்கிடும் முறை :
முதலில் உங்களின் +12 மதிப்பெண்
உதாரணமாக 1050, 1050/1200*100=87.5 87.5/100*10=8.75
பட்டம் 52% so 52/100*15=7.8
பட்டயம் 86% 86/100*15=12.9
TET 102 102/150*100=68 68/100*60=40.80
TOTAL 70.25.
இதைப் போன்றே தாள் 1 க்கும் கணக்கீட்டு கொள்ளவேண்டும்.
TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet,
TNTET - வெயிட்டேஜ் கணக்கிடும் CALCULATOR Excel Worksheet, மதிப்பெண் % கொடுத்தால் போதும்..
புதிய முறையில் வெயிட்டேஜ் கணக்கிடும் Excel Worksheet ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
Click Here For Excel File Download
இதில் முதல் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std % Here & Enter your DTED Overall % Here)என்றபகுதியில் +2, மற்றும் பட்டயபடிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...
அடுத்து Enter your TET Mark Hereஎன்ற பகுதியில் தகுதிதேர்வு மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...
இதில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் கணக்கிட ( Enter your 12th Std % Here ,Enter Your UG % Here & Enter your B,ed Overall % Here) என்றபகுதியில் +2, இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் படிப்பின் மதிப்பெண் சதவீதத்தையும் உள்ளீடு செய்யுங்கள்...
அடுத்து Enter your TET Mark Here என்ற பகுதியில் தகுதிதேர்வு மதிப்பெண்ணையும் அப்படியே உள்ளீடு செய்யுங்கள்...
ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து-
ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் பழைய முறை ரத்து
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவியல் பூர்வ முறையை உருவாக்கி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மேல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்குகிறது.
அதில், இடைநிலை ஆசிரியர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 சதவீத மதிப்பெண்களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 சதவீத மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 சதவீத மதிப்பெண்ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு.
அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
மேலும், ஆசிரியர் தேர்வின் தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. மனுதாரர் பிரியவதனா தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜரானார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
மேலும், 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மேலும், 60 லிருந்து 69 சதவீதம் பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் பழைய முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த கல்வி ஆண்டுக்குள் புதிய அறிவியல் பூர்வ முறையை உருவாக்கி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிட தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என இரு பிரிவினருக்கு தனித்தனியாக மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதில், இடைநிலை ஆசிரியர்களுக்காக, மேல்நிலைப் படிப்புக்கு 10 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே போல், பட்டதாரி ஆசிரியர்களுக்காக,மேல்நிலைப் படிப்புக்கு 15 சதவீத மதிப்பெண்ணும், டிகிரி மற்றும் பி.எட். படிப்புக்கு 25 சதவீத மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டு அரசு ஆணையின் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்குகிறது.
அதில், இடைநிலை ஆசிரியர்கள் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றால், அதற்கு, 15 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 80 முதல் 90 சதவீத மதிப்பெண்களுக்கு 12 வெயிட்டேஜ் மதிப்பெண்கள், 70 முதல் 80 சதவீத மதிப்பெண்களுக்கு, 9 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 60 முதல் 70 சதவீத மதிப்பெண்ணுக்கு 6 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 50 முதல் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் 3 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.
இதே போன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதன் மூலம், 80 முதல் 90 மதிப்பெண் பெற்றவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும், 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவருக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதிலும் அதிக வேறுபாடு உள்ளது. அவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது தவறு.
அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை மாற்ற வேண்டும். அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
மேலும், ஆசிரியர் தேர்வின் தேர்ச்சி வீதத்தில் வழங்கப்படும் 5 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிலரும், 2012-ஆம் ஆண்டு முதல் தேர்ச்சியில் 5 சதவீதம் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என சிலரும் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீது நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணை நடந்தது. மனுதாரர் பிரியவதனா தரப்பில் வழக்குரைஞர் எஸ்.நமோநாராயணன் ஆஜரானார். அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.
மேலும், 5 சதவீத தளர்வை முன் தேதியிட்டு வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட முடியாது. அவ்வாறு உத்தரவிட்டால் அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே, தேர்ச்சி சதவீதத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
மேலும், 60 லிருந்து 69 சதவீதம் பெற்றவருக்கு ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 70 மதிப்பெண் பெற்றவருக்கு வேறொரு வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கணக்கிடப்படுவதை ஏற்க முடியாது. அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.
ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கேற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட வேண்டும். அதில் அறிவியல் பூர்வ முறையை பின்பற்ற வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றம் ஒரு முறையை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
அதை பின்பற்றினாலும் சரி அல்லது அரசு தரப்பில் வேறு ஒரு அறிவியல் பூர்வ அணுகுமுறையை கொண்டுவந்தாலும் சரி. அது தொடர்பாக புதிய அரசாணை வெளியிட வேண்டும். அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை.
பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது.
ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
சிக்கல்:
கடந்த ஆண்டு மத்தியில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,), இதுவரை, நிறைவு பெறவில்லை.முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும், நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும், நீதிமன்ற வழக்கில் இருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கூறுகிறது.இதனால், முதுகலை ஆசிரியர்கள், எப்போதுநியமனம் செய்யப்படுவர் என, தெரியாத நிலை உள்ளது.டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்டாவது சுற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரும், 6 முதல், 12ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
புதிய ஆசிரியர்கள்:
இந்த தேர்வு தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்,ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்,பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யாததால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'வழக்குகள், விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை, விரைந்து நியமனம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்தது.
ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.
சிக்கல்:
கடந்த ஆண்டு மத்தியில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,), இதுவரை, நிறைவு பெறவில்லை.முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும், நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும், நீதிமன்ற வழக்கில் இருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கூறுகிறது.இதனால், முதுகலை ஆசிரியர்கள், எப்போதுநியமனம் செய்யப்படுவர் என, தெரியாத நிலை உள்ளது.டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்டாவது சுற்று, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வரும், 6 முதல், 12ம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
புதிய ஆசிரியர்கள்:
இந்த தேர்வு தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்,ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.குறிப்பாக, முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்,பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அதேபோல், பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யாததால், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், 'வழக்குகள், விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை, விரைந்து நியமனம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவித்தது.
MANONMANIAM SUNDARANAR UNIVERSITY DDCE MAY 2014 EXAM TIME TABLE
MANONMANIAM SUNDARANAR UNIVERSITY DDCE MAY 2014 EXAM TIME TABLE
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.. 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ”இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் தளர்வு வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என தொடரப்பட்ட வழங்கில் இது குறித்து வழக்கு தொடர்வதற்கு உரிய முகாந்திரம் இல்லை என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.. 2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ”இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் தளர்வு வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என தொடரப்பட்ட வழங்கில் இது குறித்து வழக்கு தொடர்வதற்கு உரிய முகாந்திரம் இல்லை என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
Tuesday, April 29, 2014
கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பில் இருந்துதான் கல்வி கட்டணம் கிடைக்கும்
மும்பையில், கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து தான் கல்விக்கட்டணம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியும் 25 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கவேண்டும். இந்த இடங்களை அரசு நிர்வாகம் நிரப்பும். தற்போது மும்பையில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் ஆன்லைனில் நிரப்பப்பட்டு வருகிறது.
இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 44 மாணவியர் விடுதி ஜூனில் கட்டுமான பணியை துவக்க திட்டம்
இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ.105 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 மாணவியர் விடுதிக்கான கட்டுமான பணியை விரைவில் தொடங்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கல்வி திறனை வளர்த் தல், இடைநிற்றலை தவிர்த் தல், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தல், கூடுதல் வகுப்பறைகளை கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின மூலம் தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி செலவில் 13 மாவட்டங்களில் மாணவியர்கள் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கடலூர் மாவட்டத்தில் 3, விழுப்புரம் மாவட்டத்தில் 8,
கிருஷ்ணகிரியில் 4, தர்மபுரியில் 3, சேலத்தில் 12 என மொத்தம் 44 இடங்களில் பொதுப்பணித்துறையின் மூலம் விடுதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறும் போது, தமிழத்தில் கடந்த 2009 திமுக ஆட்சியில் மாணவர்களின் நலன் கருதி இடைநிலை கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு சார்ந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான இடைநிலை கல்வி உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 இடங்களில் மாணவியர் விடுதிகளை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி வருகிற ஜூனில் தொடங்கும்‘ என்றார்.
கிருஷ்ணகிரியில் 4, தர்மபுரியில் 3, சேலத்தில் 12 என மொத்தம் 44 இடங்களில் பொதுப்பணித்துறையின் மூலம் விடுதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை விரைவில் துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறும் போது, தமிழத்தில் கடந்த 2009 திமுக ஆட்சியில் மாணவர்களின் நலன் கருதி இடைநிலை கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு சார்ந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான இடைநிலை கல்வி உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் 44 இடங்களில் மாணவியர் விடுதிகளை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணி வருகிற ஜூனில் தொடங்கும்‘ என்றார்.
2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும்-நீதிபதி தீர்ப்பு!!
2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் "raw&reddy"வாதாடினார்..2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார்.இதனை விசாரித்த நீதியரசர் "நாகமுத்து "அவர்கள் 2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார்.தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும்....W.P.NO:9247
தேர்தல் பணியில் மரணம் - நிவாரணம் கோரி கலெக்டர் கடிதம்
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மரணமடைந்ததை அடுத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு, கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில், தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 6 லட்சம் பேர் ஈடுபட்டனர். அவர்களுக்கு, கிரேடு அடிப்படையில், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட்டது. மேட்டூர், கொளத்தூர் பெருமாள் கோவில் நத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராசு, 44, தர்மபுரி, கொளத்தூர் கே.பள்ளிப்பட்டி ஓட்டுச்சாவடியில் பணியாற்றினார்.
ஓட்டுப்பதிவு முடிந்து வீடு திரும்பியவர் மாரடைப்பில் மரணமடைந்தார். அதேபோல், கெங்கவல்லி தாலுகா அலுவலக உதவியாளர் மாரிமுத்து, 56, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இவர்கள் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் கமிஷனுக்கு, சேலம் கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் கலக்கம்
தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக நடந்தது. விரைவாக திருத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏற்கனவே கடந்த 10ம் தேதியே திருத்தி முடிக்கப்பட்டன. இதுபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களும், பெரும்பாலான மையங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக திருத்தி முடிக்கப்பட்டன.
தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 9ம் தேதி பிளஸ்2 ரிசல்ட் வர உள்ளது. இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் வராமல் இருக்கக்கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் குறித்த பட்டியலை தயார் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆப்சென்ட் ஆனவர்கள் பட்டியலை தயாரிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளனர். வராதவர்கள் ஏன் வரவில்லை என்பது குறித்த விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இதனால் நடவடிக்கை இருக்குமோ என ஆப்சென்ட் ஆன ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
கோடை வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பாரதிராஜன், அமைப்பு செயலாளர் சண்முகநாதன், மாவட்ட துணைத்தலைவர் பூமிநாதன், தலைமையிட செலயாளர் ராமச்சந்திரன், கல்வி மாவட்ட தலைவர்கள் செல்வராஜ், ஜெயசங்கர் பங்கேற்றனர்.
2014 மார்ச்சில் பிளஸ் 1 முழு ஆண்டுதேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்,மாணவர்களை வரவழைத்து பிளஸ் 2 பாடங்களை நடத்துவதை தடை செய்ய வேண்டும். கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுதல், கோடை வகுப்புகளை ரத்து செய்யக்கோரி முதன்மை கல்வி அலுவலகம் முன் மே 1ல் உண்ணாவிரதம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பாரதிராஜன், அமைப்பு செயலாளர் சண்முகநாதன், மாவட்ட துணைத்தலைவர் பூமிநாதன், தலைமையிட செலயாளர் ராமச்சந்திரன், கல்வி மாவட்ட தலைவர்கள் செல்வராஜ், ஜெயசங்கர் பங்கேற்றனர்.
2014 மார்ச்சில் பிளஸ் 1 முழு ஆண்டுதேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்,மாணவர்களை வரவழைத்து பிளஸ் 2 பாடங்களை நடத்துவதை தடை செய்ய வேண்டும். கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுதல், கோடை வகுப்புகளை ரத்து செய்யக்கோரி முதன்மை கல்வி அலுவலகம் முன் மே 1ல் உண்ணாவிரதம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனுமதியின்றி பாடப்புத்தகங்களை எடுத்துச்சென்ற கல்வித்துறை ஊழியர் இடைநீக்கம்.
அனுமதியின்றி பள்ளி பாடப்புத்தகங்களை எடுத்துசென்ற பழநி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.
பழநி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் சிவசண்முகம். இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2005-06 கல்வியாண்டிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்துசென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலையரசி விசாரணை நடத்தினார்.விசாரணையில், கரையானால் அரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அவர் வெளியில் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்து சென்றசிவசண்முகத்தை "சஸ்பெண்ட்"&' செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
பழநி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தவர் சிவசண்முகம். இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2005-06 கல்வியாண்டிற்கான பள்ளி பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்துசென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலையரசி விசாரணை நடத்தினார்.விசாரணையில், கரையானால் அரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை அவர் வெளியில் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பாடப்புத்தகங்களை அனுமதியின்றி எடுத்து சென்றசிவசண்முகத்தை "சஸ்பெண்ட்"&' செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
Monday, April 28, 2014
"மாணவர்களே...அரசு பள்ளிக்கு வாங்க": பேனர் வைத்து அழைப்பு
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆண்டு தோறும் "பிளக்ஸ் பேனர்" வைத்து, மாணவர்களை அழைக்கிறது, அரசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த தென்னம்பாளையத்தில், அரசூர் ஊராட்சி துவக்க பள்ளி சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "அரசு பள்ளியில் சேர்ந்து படித்தால், புத்தகங்கள், நோட்டுகள், பஸ் பாஸ் மற்றும் சீருடைகள் இலவசமாக அரசால் வழங்கப்படுகின்றன. பள்ளியில் சனி, ஞாயிறு அன்று மாணவர்களின் தனித்திறமையை வளர்க்கும் விதத்தில் கராத்தே, நடனம் மற்றும் யோகா கற்றுத்தரப்படும்..." என்பது உள்ளிட்ட வாசகங்கள் பேனரில் உள்ளன.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் கூறியதாவது: எங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, இது போன்று பேனர்களை கடந்த சில ஆண்டுகளாக வைத்து வருகிறோம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது மட்டுமல்லாமல், மாணவர்களின் தனித்திறமையை அறிந்து, பொம்மை தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.
எங்கள் துவக்கப்பள்ளியில் தனியாக நூலகம் அமைத்து, மாணவர்களின் வாசிக்கும் திறனை வளர்த்து வருகிறோம்.படிக்க வசதியற்ற மாணவர்களை கண்டறிந்து, தனியார் தொழில் நிறுவனங்களிடம் கல்வி ஊக்கத்தொகை பெற்று தருகிறோம்.
சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், சிறுசேமிப்பு திட்டத்தை செயல்படுத்துகிறோம். நாட்குறிப்பு எழுதுதல், ஐ.டி., கார்டு அணியும் பழக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தி உள்ளோம். ஆங்கிலம் எழுதவும், படிக்கவும் தனி பயிற்சி அளிக்கிறோம். ஆசிரியைகளின் ஒத்துழைப்போடு, அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION
ALAGAPPA UNIVERSITY-B.ED PROGRAMME IN DISTANCE EDUCATION -
Important Dates
Application Forms are issued from
|
07 – 04 - 2014
|
Last date for the issue and receipt of filled in Application Forms
|
09 – 05 - 2014
|
Date of Entrance Examination
|
மீண்டும் சூடு பிடிக்கும் இரட்டைப்பட்ட வழக்கு
2012-ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தம் முடி வடைந்த விட்டது என்று எண்ணிய நேரம் மீண்டும் ஆரம்பமாகி உள்ளது .ஓராண்டு பட்டம் பெற்றவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் முதன்மை அமர்வில் மாண்பு மிகு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி
மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.அம்மனு மீதான விசாரணை வருகிற மே 2 ஆம் தேதி அன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு
வருகிறது .அந்த மனுவில் கூறியுள்ளதாவது.
1) 01.01.2012 முதல் தங்களுக்குறியseniority -ஐ வழங்க வேண்டும்
2)01.01.2012 pannel -லின் மூலம் பதவியுயர்வு பெற்றவர்கள் ( மூன்று வருட பட்டபடிப்பு )நிலையிறக்கம் செய்ய வேண்டும்
3)01.01.2013 pannel-இல் ஓராண்டு பட்டம் பெற்றவர்களை pannel -ல் சேர்த்து பதவியுயர்வு வழங்க வேண்டும் .அது வரை பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டு உள்ளதாக தெரிய வருகிறது.
எனவே 01.01.2012 -pannel -ன் மூலம் பதவியுயர்வுபெற்றவர்களுக்கு நிலையிறக்கம் (கீழ் இறக்கம் )நிலை உருவாகி உள்ளது.01.01.2013 pannel மற்றும் 01.01.2014 pannel -இல் இடம் பெற்றவர்களுக்கும் சிக்கல் உருவாகி உள்ளது .ஓராண்டு பட்டம் பெற்றவர்களை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இறுதி வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்மென இரண்டு வருடங்களாக இந்த வழக்கை தொடர்ந்து நடத்துபவர்கள் விரும்புகின்றனர்.
எனவே அது தொடர்பான தகவல்களுக்கு கீழ் கண்ட mobile number -ஐ தொடர்பு கொள்ளவும்
-94432 15526
-99764 74082
கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை!!
பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், பள்ளிகளில் 16 ஆயிரத்து 582 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, 5000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.அரசு வேலை என்பதால், பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியமாக இருப்பினும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வாரத்துக்கு மூன்று நாட்கள், பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதால், தனியார் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பணி வாய்ப்பு கிடைப்பதில்லை.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அரையாண்டு, காலாண்டு விடுமுறையின்போது ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், தேர்வுகளுக்கு முன்பு கூடுதல் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்திக்கொண்டு, முழு ஊதியத்தையும் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் மே மாதத்தில், கோடை விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சக ஆசிரியர்களை போன்று இவர்களுக்கும், மே மாத ஊதியத்தை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,''பகுதி நேர ஆசிரியர்கள் எந்நேரத்திலும், பணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். பகுதி நேரம் என்றாலும், பல இடங்களில் தலைமையாசிரியர்களின் வற்புறுத்தலால் பள்ளிகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மே மாதத்தில், ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால், ஆசிரியர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சக ஆசிரியர்களை போன்று, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மே மாதத்தில், ஊதியம் வழங்க வேண்டும்,'' என்றார்.
மே 14 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மே 14-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம் குறித்த அரசு அறிவிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) வெளியிடப்படுகிறது.
மே 14-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை விநியோகிக்க மருத்துவக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மே 3 முதல் பி.இ. விண்ணப்பம்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 9-ஆம் தேதி வெளியாகின்றன. பிளஸ் 2 பாடத் திட்டத்தில் கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றை முக்கிய பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் பி.இ. படிப்பையும், உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகியவற்றை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்த பெரும்பாலான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளையும் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.
எனினும் கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பொருத்து உயிரியல் படித்த மாணவர்கள்கூட பி.இ. படிப்பைத் தேர்வு செய்வது உண்டு.
பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 3-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் விநியோகிக்க உள்ளது.
2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழகத்தில் மொத்தம் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 2,555; இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய 15 சதவீத இடங்கள், அதாவது 383 எம்.பி.பி.எஸ். இடங்கள் போக மீதமுள்ள 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரியவை ஆகும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000-த்தையும் சேர்த்து ஆண்டுக் கட்டணம் ரூ.12,290தான். இந்த இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கலந்தாய்வு நடைபெறும்.
900 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்படும் 12 தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே விண்ணப்பம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து வழக்கம்போல் ஒரே விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்தாலே போதுமானது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கிடைக்காத மாணவர்களுக்கு, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் பி.டி.எஸ். படிப்பில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
Sunday, April 27, 2014
எம்.பி.ஏ., படிப்பது என்றால் என்ன?
எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்வதென்பது, வெறுமனே அசைன்மென்ட்டுகள், பாடப்புத்தகங்கள், மேலாண்மை தியரி மற்றும் கருத்தாக்கங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல.
எம்.பி.ஏ., என்பது வகுப்பறை தியரி மற்றும் அசைன்மென்ட் என்பதைவிட, அதிகளவில் அனுபவ அறிவை சார்ந்த படிப்பாகும். அந்த அறிவைப் பெற, கேஸ் ஸ்டடீஸ், ரோல் பிளே, மேனேஜ்மென்ட் கேம்ஸ் மற்றும் புராஜெக்ட்டுகள் போன்றவை ஒருவருக்கு நடைமுறை வணிக அறிவைத் தருவதில் பெரும் பங்காற்றுகின்றன.
இந்த நிலையில், ஒரு மாணவர், நேர மேலாண்மை மற்றும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவது போன்ற விஷயங்களின் முக்கியத்துவத்தை உணர்கிறார். எம்.பி.ஏ., கல்வி என்பது ஒரு மாற்றமடையும் அனுபவமாகும். விவாதங்கள், குழு பயிற்சிகள், கேம்ஸ் மற்றும் புராஜெக்ட்டுகள் போன்றவை ஒரு எம்.பி.ஏ., மாணவரின் நிபுணத்துவ திறமைகளை மேம்படுத்துகின்றன.
இவைதவிர, தலைமைத்துவ பண்பு, தகவல்தொடர்பு மற்றும் குழுவாக பணி செய்தல் உள்ளிட்ட மென் திறன்களை கற்றுக்கொள்வது, ஒரு வெற்றிகரமான மேலாண்மை நிபுணராக திகழ்வதற்குரிய முக்கிய தேவைகள்.
ஐ.ஐ.எம்.,கள் அல்லாத பிற கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகளை மேற்கொள்வது பயன்தரக்கூடியதா?
கல்வி என்பது மதிப்பு வாய்ந்தது. அதை எவ்வாறு திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். படிப்பின் வெற்றி என்பது அதை மேற்கொள்ளும் இடத்தைவிட, கற்பவரின் திறன் மற்றும் ஆர்வத்தை சார்ந்தே பெரிதும் இருக்கிறது.
ஏனெனில், ஐ.ஐ.எம்.,கள் சாராத இதர மேலாண்மை கல்வி நிறுவனங்களில், ஏன், பிரபலமே அல்லாத மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படித்த பலபேர் வணிக உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், பிரபலமான கல்வி நிறுவனங்களில் படித்த பலர், எந்த சாதனையும் செய்யாமல், ஏதோ வேலை செய்தோம், சம்பளம் வாங்கினோம் என்று இருந்துவிட்டு, தம் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்களும் உண்டு.
ஆனால், பிரபலமான சிறந்த கல்வி நிறுவனம் என்று அறியப்படுவனவற்றில் இருக்கும் நன்மை என்னவெனில், அங்கிருக்கும் வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள். இயல்பிலேயே நல்ல திறமைகளைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, அதுபோன்ற கல்வி நிறுவனங்கள், திறமைகளை மேலும் மெருகேற்றி வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கும்.
மேலாண்மை கல்வி என்பது, சமூக மற்றும் பொருளாதார தளங்களில், பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன்மூலம் நம் நிஜ உலக அறிவை வளர்த்துக் கொள்வதாகும். வணிகத்தின் நுட்பமான வேறுபாடுகளை புரிந்து கொள்வதற்கும் மேலாக, வணிக உலகில் அதுவரை பின்பற்றப்படும் வழக்கமான அம்சங்களுக்கு சவால்விடும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எனவே, ஐ.ஐ.எம்.,கள் தங்களது நிலையை உணர்ந்தால், அதாவது தாங்கள் ஒரு உலகளாவிய வணிகப் பள்ளியா? அல்லது வெறுமனே ஒரு ஸ்பெஷலைசேஷன் கல்வி நிறுவனமா? தங்களது பணியின் தன்மை என்ன என்பதை அவை உணர்ந்து கொண்டால், மேற்கண்ட திறமைகள் மாணவர்களுக்கு வாய்க்கப்பெறும்.
தற்போது ஐ.ஐ.எம்.,கள், தொடர்ச்சியாக, தொழில் நிறுவனங்களுடன் தொடர்புகளை மேம்படுத்தி வருகிறது. இதன்மூலம், சமீபத்திய தொழில்துறை மாற்றங்களைக்கூட, பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மேலும், தொழில்துறை நிபுணர்கள், பாடத்திட்டங்கள், குறிப்பாக எலெக்டிவ்களை(electives) வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.
மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு தாமதத்தை தவிர்க்க கல்வித்துறை புதிய நடவடிக்கை
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் தேர்வு முடிவிற்குப் பின் அந்தந்த பள்ளிகளிலேயே தாமதம் இன்றி உடனுக்குடன் "ஆன்-லைனில்" வேலைவாய்ப்பு பதிவு செய்ய கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
பதிவு மூப்பு
தேர்வு முடிவிற்குப்பின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய மாணவ, மாணவியர் நீண்ட வரிசையில் காத்திருப்பர். ஒரு நாள் தாமதம் ஆனாலும் பதிவுமூப்பு தள்ளிப்போகும் நிலையும் இருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவிற்குப்பின் மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே "ஆன் - லைன்" மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ள இரு ஆண்டுகளுக்கு முன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
மேலும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு கணக்கை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு வரை தேர்வு முடிவிற்குப்பின் மாணவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் ஆன் - லைனில் பதிவேற்றம் செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. பின், பதிவு செய்யப்பட்டதற்கான அட்டைகளும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஒரே நேரத்தில் ஏராளமான தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால் அதிக நேரம் பிடிக்கிறது. இதனால், மாணவர்கள் தவிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பிரச்னையை இந்த ஆண்டு தீர்க்கும் வகையில் கல்வித்துறை புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாணவர்கள் குறித்த முழு விவரங்களும் ஏற்கனவே பெறப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாணவர் பெயர், பெற்றோர் பெயர், பள்ளி, சொந்த ஊர் உள்ளிட்ட பல விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பயிற்சி
தேர்வு முடிவு வந்ததும் அதில், மதிப்பெண் சான்றிதழ் எண்களை மட்டும் பதிவு செய்ய வேண்டியது மட்டும் தான் வேலை. இதனால், உடனுக்குடன் எளிதில் பதிவு செய்ய முடியும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரக அதிகாரிகள் ஏற்கனவே பள்ளி ஆசிரியர், பணியாளர்களுக்கு, "ஆன் - லைன்" வழியில் பதிவு செய்வது குறித்து பயிற்சி அளித்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு பள்ளிக்கும் உபயோகிப்பாளர் அடையாளம் (யூசர் ஐ.டி.,) மற்றும் ரகசிய எண் (பாஸ்வேர்டு) ஆகியவற்றையும் வேலை வாய்ப்புத்துறை வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி உடனுக்குடன் வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ள ஆசிரியர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு அட்டவணை
நாள்
|
பாடம்
|
ஜூன் 20 (வெள்ளி)
|
கற்கும் குழந்தை
|
ஜூன் 21 (சனி)
|
கற்றலை எளிதாக்குதலும்,
மேம்படுத்
துதலும்-1
|
ஜூன் 23 (திங்கள்)
|
மொழிக் கல்வி
(தமிழ்,
தெலுங்கு,
உருது,
மலையாளம்)-1,
இளஞ்சிறார்
கல்வி-1
|
ஜூன் 24 (செவ்வாய்)
|
ஆங்கில மொழிக்கல்வி-1
|
ஜூன் 25 (புதன்)
|
கணிதவியல் கல்வி-1
|
ஜூன் 26 (வியாழன்)
|
அறிவியல் கல்வி-1
|
ஜூன் 27 (வெள்ளி)
|
சமூக அறிவியல் கல்வி-1
|
பட்டையபடிப்பு முதலாம் ஆண்டு
இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது
இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி
திருச்சியில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.
5 சதவீத மதிப்பெண் சலுகை
ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற
வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம்
மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்தசலுகை
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு
எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்–அமைச்சர்
ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில்அறிவித்தார்.
இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150–க்கு 82 மதிப்பெண்கள்
எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.
ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி
பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த
நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல்
89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மையங்களில்
கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே
வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியர்கள்
இந்த நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருகிற
6–ந் தேதி தொடங்குகிறது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி
திருச்சியில் வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது.
5 சதவீத மதிப்பெண் சலுகை
ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற
வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம்
மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்தசலுகை
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு
எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்–அமைச்சர்
ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில்அறிவித்தார்.
இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150–க்கு 82 மதிப்பெண்கள்
எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது.
ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி
பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த
நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல்
89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மையங்களில்
கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே
வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியர்கள்
இந்த நிலையில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வருகிற
6–ந் தேதி தொடங்குகிறது.
இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
செல்வக்குமார் கூறுகையில், ‘‘5 சதவீத மதிப்பெண் சலுகை
பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
பணி மே மாதம் 6–ந் தேதி தொடங்குகிறது. திருச்சியில்
வாசவி வித்யாலாய பள்ளியில் இந்த பணி நடைபெற
உள்ளது.இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 1,086 பட்டதாரி
ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது.
மே 12–ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடையும்’’ என்றார்.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு அட்டவணை
நாள்
|
பாடம்
|
ஜூன் 11 (புதன்)
|
இந்திய கல்வி
முறை
|
ஜூன் 12 (வியாழன்)
|
கற்றலை எளிதாக்குதலும்,
மேம்படுத்துதலும்-2
|
ஜூன் 13 (வெள்ளி)
|
மொழிக் கல்வி
(தமிழ்,
தெலுங்கு,
உருது,
மலையாளம்)-2,
இளஞ்சிறார்
கல்வி-2
|
ஜூன் 14 (சனி)
|
ஆங்கில மொழிக்கல்வி-2
|
ஜூன் 16 (திங்கள்)
|
கணிதவியல் கல்வி-2
|
ஜூன் 17 (செவ்வாய்)
|
அறிவியல் கல்வி-2
|
ஜூன் 18 (புதன்)
|
சமூக அறிவியல் கல்வி-2
|
பட்டையபடிப்பு 2-ம் ஆண்டு
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் .
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.
நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Saturday, April 26, 2014
பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். அவர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராடினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுக்குசிறப்பு தேர்வு வைத்து பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்களிலும் சிலர் தேர்ச்சி பெறவில்லை.எனவே அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்.
இதைத்தொடர்ந்து கம்ப்யூட்டர் ஆசிரியர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.இதைத்தொடர்ந்து தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, இனிமேல் கம்ப்யூட்டர் ஆசிரியர்களை அரசு பள்ளிகளில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி புதிதாக 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இப்போதும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மேலும் சில வித ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், இடஒதுக்கீடு அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். அதுபோல புதிதாக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் 1,000 பேர் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு தேர்தல் முடிந்த பின்னர் வர உள்ளது.இந்த தகவலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கலை, அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வினியோகம்
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் கலை அறிவியல் படிப்பில் சேரும் வழக்கம்தான் நடைமுறையில் உள்ளது.
Subscribe to:
Posts
(
Atom
)