அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள,1.92 லட்சம் இடங்களுக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், துவங்கியது.முதல் மாணவி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தேர்வு செய்தார். தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரிகள் அண்ணா பல்கலையின் இணைப் புடன் செயல்படுகின்றன.
விளையாட்டு பிரிவு :இந்த கல்லுாரிகளில், 65 சதவீதம் அரசு இடங்களாகவும், 35 சதவீதம் நிர்வாக இடங்களாகவும் நிரப்பப்படுகின்றன. சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள், தலா, 50 சதவீதம் அரசு மற்றும் நிர்வாக இடங்களாக மாற்றி கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு, நேற்று முதல் ஒற்றை சாளர கவுன்சிலிங் துவங்கியது. முதல் நாளில்,விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு , கவுன்சிலிங் நடந்தது. இதில், சென்னை, வேலம்மாள் மெட்ரிக் பள்ளியின் செஸ் விளையாட்டு மாணவி வர்ஷினிமுதல் இடம் பெற்றார்.
அவர் செஸ் விளையாட்டு போட்டிக்கு சென்றிருந்ததால், அவரது தந்தை கவுன்சிலிங்கில் பங்கேற்று, கிண்டி இன்ஜி., கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்படிப்பை தேர்வு செய்தார்.நாமக்கல்லை சேர்ந்த நவீன் பிரபு, 'கோகோ' விளையாட்டின் மதிப்பெண் மூலம், இரண்டாம் இடம் வந்தார். அவர் சென்னை, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு செய்தார். மதுரை, சிம்மக்கல், சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளியின் கேரம் விளையாட்டு மாணவிஸ்வேதா, மூன்றாம் இடம் பெற்று, குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில், 'புரொடக் ஷன் இன்ஜி.,' படிப்பை தேர்வு செய்தார்.
வாழ்த்து :
கவுன்சிலிங்கில் இட ஒதுக்கீடு பெற்ற, முதல், ஐந்து பேருக்கு, விளையாட்டு துறை செயலர் ராஜேந்திர குமார், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி, பல்கலை பதிவாளர் கணேசன், மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி ஆகியோர் ஒதுக்கீட்டு ஆணை வழங்கி வாழ்த்தினர்.இன்று மாற்று திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, 7:30 மணிக்கு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவங்குகிறது.
இந்த ஆண்டு, மொத்தம், 1.31 லட்சம் விண்ணப்பங்கள், கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்றுள்ளன. கவுன்சிலிங் தொடர்பான அழைப்புகடிதங்கள், https://www.annauniv.edu இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.இதே தளத்தில் மாணவர் சேர்க்கை, சான்றிதழ் கள், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றை முன்கூட்டியே படித்து, தயாராக வரும்படி மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தெரிவித்தார்.தங்கும் வசதி :கவுன்சிலிங்கிற்கு வரும் வெளியூர் மாணவியர், பெண் துணையுடன் வந்தால், அவர்களுக்கு அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள மாணவியர் விடுதியான ரோஜா கட்டடத்தில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 600 பேர் தங்குவதற்கான அறைகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான ஏற்பாடு களை, கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர் நாராயணசாமி மேற்கொண்டுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை