பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் (அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று அங்கு படிக்கும் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். அதனால்தான் மாணவர்களின் நலன்கருதி அந்த பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்டது.
இதேபோல், கோவையில் அறக்கட்டளை மூலம் இயங்கும் ஒரு தனியார் அரசு உதவிபெறும் கல்லூரியையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே நிலைதான் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியிலும் உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கல்வியில் பிரச்னை வந்தால் அந்த கல்லூரிகளை அரசு ஏற்று நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை