1.இரவில் எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் தினசரி அதிகாலை 4 மணிக்கு எழுவது ஜெ.வின் வழக்கம் .அவரை எழுப்பவேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளர்கள் பூங்குன்றன், சுரேஷ் ஆகிய உதவியாளர்கள் 3.50க்கு அலாரம் செய்து விடுகின்றனராம்.2.சூரிய உதயத்திற்கு முன்னதாக பஜனைப் பாடல்கள் கேட்பது முதல்வருக்கு பிடிக்குமாம். சிலநிமிடங்கள் தியானம் இருக்கும் முதல்வர் வெறும் வயிற்றில் துளசி கலந்த நீரை குடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
3.சூரியன் உதயமானதும் தினசரி சூர்ய நமஸ்காரம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜன்னல் அல்லது பால்கனி வழியே சூரிய பகவானை வணங்கி விட்டுத்தான் அடுத்த வேலையை தொடங்குவார்.
4.செல்போனில் பேசுவதை பெரும்பாலும் விரும்ப மாட்டாராம். லேண்ட்லைனில்தான் பெரும்பாலோனோருடன் பேசுவார். பூங்குன்றன் தவிர அரசுத் துறையின் சீனியர் செயலாளார்கள் இன்டர்காம் போனில்தான் அவரிடம் பெரும்பாலும் தகவல்களைப் பரிமாறுவார்கள். 5.ஹோட்டல் சாப்பாடு ஜெயலலிதா சாப்பிடவே மாட்டாராம். பெர்சனல் சமையல்காரர்தான் சமைப்பார். மதிய உணவுக்குப் பின்னர் அவர் தூங்குவதை விரும்ப மாட்டாராம்.
6.நகர வாழ்க்கையில் இருந்து சில நாட்கள் விடுபட்டு அவ்வப்போது ஜெ. கொடநாடு செல்வது எதற்காக தெரியுமா? மிதமான குளிரில் இதமான வாக்கிங் போவாராம். பேட்டரி காரை தானே இயக்கி டீ எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பாராம்.
7.முதல்வருக்கு கார் ஓட்டுவதில் அலாதிப் பிரியம். எந்த புது கார் வாங்கினாலும் சசிகலாவை பின்னால் அமரவைத்து டெஸ்ட் டிரைவ் செய்வாராம். சமீபத்தில் மஹேந்திராவின் புதிய எக்ஸ்.யூ.வி 500 காரை எஸ்டேட் பங்களாவிற்கு கொண்டு வந்து டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தாராம்.
8.ஜெயலலிதாவின் குரல் வளம் அனைவரும் அறிந்ததே. நவராத்திரி கொலுவின் போது வீட்டில் பக்திப் பாடல்களைப் பாடி அசத்தினாராம். மாலை நேரத்தில் எல்.ஆர். ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள், சூலமங்கலம் சகோதரிகளின் பாடல்களைக் கேட்பாராம்.
9.ஜெயலலிதா உடன் காரில் அமர்ந்திருக்கும் சசிகலா எப்பொழுதும், எப்பொழுதும் ஒரு டைரி, பேனாவை தயாராக வைத்திருப்பாராம். தான் போகும் வழியில் கவனிக்கும் முக்கியமான விசயங்கள் பற்றிய குறிப்புகளை அதை கவனமாகக் குறித்துக் கொள்வாராம் சசிகலா.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை