மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் 5 புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். செவ்வாய் கிரகத்தையொட்டிய சுற்றுப்பாதைக்குள் விண்கலம் செலுத்தப்பட்ட பிறகு, அதிலுள்ள மார்ஸ் கலர் கேமரா காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இந்தப் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படங்கள் இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
விண்கலத்தை செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான கட்டளைகள் ஒவ்வொன்றும் துல்லியமாக செயல்படுத்தப்பட்டன. இதனால், எந்தவிதச் சிக்கலும் இன்றி மங்கள்யான் செவ்வாய் கிரகத்தையொட்டிய சுற்றுப்பாதைக்குள் செலுத்தப்பட்டது.
விண்கலத்திலிருந்து வந்த சிக்னல்கள் ஆஸ்திரேலியாவின் கேன்பெரா, அமெரிக்காவின் கோல்டு ஸ்டோன் ஆகிய இடங்களில் உள்ள தொலை தூர கட்டுப்பாட்டு மையங்களில் பெறப்பட்டன. அதைவைத்தே விண்கலம் திட்டமிட்டப் பாதையில் சென்றது உறுதிசெய்யப்பட்டது. அந்த மையங்களில் சிக்னல்கள் பெறப்பட்ட அந்த நேரத்திலேயே பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையத்துக்கு சிக்னல்கள் அனுப்பப்பட்டன.
விண்கலத்தில் உள்ள மார்ஸ் கலர் கேமரா இயங்கத் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த கேமரா மூலம் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களும் பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்கள் இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை