இஸ்ரோ விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருப்பது இந்திய அணி கிரிக்கெட்டில் பெறும் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசினார்....
இஸ்ரோ சென்று விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய பிரதமர், அப்போது மங்கள்யான் திட்டம் வெற்றி பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார்.
அப்போது, இந்திய அணி கிரிக்கெட்டில் வெற்றி பெற்றால் நாடே கொண்டாடுகிறது. ஆனால் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனை அதைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது. இந்தியர்கள் அனைவருமே கொண்டாட வேண்டிய தருணம் இது.
வரலாறு படைக்கப்பட்டுள்ளது. கற்பனையிலும் நினைக்க முடியாத சில விஷயங்களை நமது விஞ்ஞானிகள் நிஜத்தில் செய்து நமது திறமையை நிரூபித்துள்ளனர். உலகத்துக்கே சவால் விடும் வகையில் நமது விஞ்ஞானிகள் செயல்பட்டுள்ளனர்.
இந்த தருணத்தில், இந்தியாவின் பல்வேறு பெருமைகளில் ஒன்றான உலகத்துக்கு ஸீரோவை அளித்தது, கிரகணங்களை துல்லியமாக கணித்தது, கிரகங்களின் நிலைகளை கண்டுபிடித்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை ஏற்படுத்தியவர்களை நினைவில் கொள்ள வேண்டும்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அரிய சாதனையை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் எடுத்துக் கூற வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக அவர் பேசுகையில், மார்ஸ் ஆர்பிடர் மிஷன் (Mars Orbiter Mission) என்பதை சுருக்கி மாம் (MOM) என்று அழைத்தார்.
மோடி பேசியதாவது, இன்று நமது மாம் செவ்வாய் கிரகத்தை நேரில் சந்தித்துள்ளது மற்றும் செவ்வாய் கிரகமும் நமது மாம்-ஐ பார்த்துள்ளது என்றார் மகிழ்ச்சியோடு.
மேலும், ஒரு போதும் நமது மாம் நம்மை ஏமாற்றாது என்றும் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை