மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசின் அறிவிக்கை, மத்திய அரசின் அனைத்துத் துறை செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசின் அறிவிக்கை, மத்திய அரசின் அனைத்துத் துறை செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவைச் செயலர் அஜித் சேத் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி தனது சுதந்திர தின உரையின்போது, "தூய்மை இந்தியா' பிரசாரத்தை அறிவித்தார். அதன்படி, வரும் அக்டோபர் 2-ந் தேதி இந்தப் பிரசாரத்தை அவர் தொடங்கவுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, அன்றைய தினத்தன்று, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். முன்னதாக, அனைத்து மத்திய அமைச்சக அலுவலகங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தில் ஒவ்வொரு அமைச்சகமும் கட்டாயம் கலந்து கொண்டு, தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை