Ad Code

Responsive Advertisement

5% மதிப்பெண் தளர்வு ரத்து உத்தரவு குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது

நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அளித்த 5% மதிப்பெண் தளர்வுக்கு தடை விதித்தது. இந்த வழக்கு 5% தளர்வு பெற்றவர்கள்  யாரும் வேலைக்கு செல்லகூடாது இதனால் கல்வி தரம்
பாதிக்கும் என்று கோர்ட் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசானையை ரத்து செய்து உத்தரவிட்டது. இருப்பினும் இதற்கு முன் இந்த 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சேர்ந்தவர்களும் தற்போது தேர்வாகியுள்ளவர்களையும் தொந்தரவு செய்யகூடாது என்று கோர்ட் கூறியுள்ளது.

அப்படியென்றால் தற்போது 5% மதிப்பெண் தளர்வில் வேலைக்கு சென்றவர்களால் கல்வி தரம் பாதிக்காத வழக்கு தொடுத்தவரின் கோரிக்கை 5% தளர்வு அளிக்க கூடாது என்று அது தற்போது தோல்வியில் தானே முடிந்துள்ளது

பல மாநிலங்களில் 5% மதிப்பெண் தளர்வு அளித்துள்ளனர் அங்கு மட்டும் சட்டம் வழிவகை செய்யும் போது நமது மாநிலத்தில் ஏன் சட்டம் வழிவகை செய்யாது.

சென்னை உயர்நீதிமன்றம் இது அரசின் கொள்கை என்று கூறியபின் மதுரை கிளை இவ்வாறு கூறியுள்ளது அனைவருக்கும் குழப்பத்தை மட்டும் தான் ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை நாட்கள் இந்த வழக்கு தீர்ப்பு வராமல் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் உடனடியாக தீர்ப்பு வருகிறது. அனைவரையும் ஒரு குழப்பத்தில் ஆழ்த்தி எடுத்துள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement