உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை, தாசில்தார் அலுவலகங்களில், பொது மக்கள் பார்வைக்கு வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில், முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி வந்தது. இதையடுத்து, ஆக., 10ல், சமூக நலத்துறை அமைச்சர், சரோஜா, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், சென்னையில், வருவாய்நிர்வாக ஆணையர், சத்யகோபால் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், தாசில்தார் அலுவலகங்களில், உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போர் பட்டியலை, மக்கள் பார்வைக்கு வைக்கவும், அரசு இணையதளங்களில் வெளியிடவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதில், மாநிலம் முழுவதும்உள்ள இடர்பாடுகளை தடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இத்தகைய கலந்தாய்வு கூட்டம் நடத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், வருவாய் நிர்வாக ஆணையர் தரப்பில், மாவட்ட கலெக்டர்களுக்கு, சில உத்தரவுகள் பிறப்பித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது: தாசில்தார் அலுவலகங்களில், உதவித் தொகைக்காக விண்ணப்பிப்போரை, வரிசைப்படி ஆவணத்தில் பதிவு செய்ய வேண்டும். 'சீனியாரிட்டி' அடிப்படையில், அவர்களுக்கான உத்தரவு வழங்க வேண்டும். உதவித்தொகை வழங்கப்படாதவர்களின் படிவங்களை பரிசீலித்து, உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில், முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி வந்தது. இதையடுத்து, ஆக., 10ல், சமூக நலத்துறை அமைச்சர், சரோஜா, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், சென்னையில், வருவாய்நிர்வாக ஆணையர், சத்யகோபால் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், தாசில்தார் அலுவலகங்களில், உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போர் பட்டியலை, மக்கள் பார்வைக்கு வைக்கவும், அரசு இணையதளங்களில் வெளியிடவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதில், மாநிலம் முழுவதும்உள்ள இடர்பாடுகளை தடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இத்தகைய கலந்தாய்வு கூட்டம் நடத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், வருவாய் நிர்வாக ஆணையர் தரப்பில், மாவட்ட கலெக்டர்களுக்கு, சில உத்தரவுகள் பிறப்பித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது: தாசில்தார் அலுவலகங்களில், உதவித் தொகைக்காக விண்ணப்பிப்போரை, வரிசைப்படி ஆவணத்தில் பதிவு செய்ய வேண்டும். 'சீனியாரிட்டி' அடிப்படையில், அவர்களுக்கான உத்தரவு வழங்க வேண்டும். உதவித்தொகை வழங்கப்படாதவர்களின் படிவங்களை பரிசீலித்து, உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை