சமையலுக்காக பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரின் மானியத்தை முற்றிலும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ஒரு மாதத்துக்கு 4 ரூபாய் வீதம் குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதும் நீக்க மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்களுக்கு, 'சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை மாதம் 2 ரூபாய் வீதம் குறைத்து வாருங்கள்' என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், இனி மாதம் 4 ரூபாய் வீதம் குறைக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இப்போது, 14.2 கிலோ எடையுள்ள பனிரெண்டு சமையல் காஸ் சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. 12-க்கு மேல் போனால், காஸ் சிலிண்டரை மானியம் இல்லாமல் 564 ரூபாய் வாங்க வேண்டி வரும். மத்திய அரசின் இந்த முடிவு சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை