பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், வாஞ்சி மணியாச்சி முதல் நெல்லை வழியாக நாகர்கோவில் வரையிலானபாதையில் இரட்டை மின்ரயில் பாதை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.1,112 கோடி ரூபாய் செலவில், இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. 120 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் பாதையை, 4 ஆண்டுகளில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போல், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்யவும், பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை