இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில் படிக்க, கூடுதல் கால அவகாசமும், கட்டண சலுகையும் அளிக்கப்பட்டுள்ளது.
இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின், ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை, 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
இக்னோவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டய படிப்பு முடிப்பவர்களை, சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்த படிப்பிலும் மாணவர்கள் சேரலாம். மேலும், இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க, திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம்.படிப்பில் சேர விரும்புவோர், www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் விபரங்கள் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ - மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இக்னோ சென்னை மண்டல இயக்குனர் எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின், ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாத சான்றிதழ் படிப்புகளுக்கு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை, 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
இக்னோவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டய படிப்பு முடிப்பவர்களை, சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்த படிப்பிலும் மாணவர்கள் சேரலாம். மேலும், இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க, திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம்.படிப்பில் சேர விரும்புவோர், www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் விபரங்கள் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ - மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை