கோபியில் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிளஸ்-2 மாணவர்களுக்கு பரிட்சை எழுதும்போது பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு மாதிரி வினா-விடை வழங்கப்பட உள்ளது.
இதேபோல் பிளஸ்-1 வகுப்பு பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும்.
ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் நம்பியூரில் அரசு கலை கல்லூரி 4-ம்தேதி தொடங்கப்பட உள்ளது. அதேநாளில் டி.என்.பாளையத்தில் ஐ.டி.ஐ. அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.
மேலும் 450 மையங்களில் பல்வேறு பொது தேர்வுகளை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் பல்வேறு நிலைகளில் அதற்கேற்ப திட்டங்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை