''பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நலனுக்காக, ஓரிரு நாளில் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியிடப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த, கொளப்பலுாரில் நேற்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:தமிழக மாணவர்கள், பல்வேறு பொதுத் தேர்வை சந்திக்கும் வகையில், 450 மையங்களில், வாரந்தோறும், சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்படும். எந்த தேர்வாக இருந்தாலும், அதை, மாணவர்கள் எளிதாக சந்திக்கும் வகையில், 54 ஆயிரம் வினாக்கள் அடங்கிய தொகுப்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வரைபடங்களுடன் வெளியிடப்படும்.
பிளஸ் 1 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அவர்களுக்கு, இன்னும் ஓரிரு நாட்களுக்குள், மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். எப்படி தேர்வை எழுத வேண்டும் என்பதை, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை