பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு, தத்கல் முறையில், இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூனில் நடக்கவுள்ள, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காவிட்டால், 'தத்கல்' முறையில், சிறப்பு கட்டணத்துடன் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில், பெயரை பதிவு செய்ய வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலையும்; தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து பங்கேற்காதவர்கள், ஹால் டிக்கெட்டையும், விண்ணப்பிக்கும் அலுவலரிடம் காட்ட வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள், திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலுார், வேலுார் மற்றும் சென்னையில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டும், தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
10ம் வகுப்புக்கும் விண்ணப்பம் : இதேபோல், 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், தத்கல் சிறப்பு கட்டண திட்டத்தில் விண்ணப்பிக்க, அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதோர் மற்றும் விண்ணப்பித்து தேர்வை எழுத முடியாதோர், ஜூனில் நடக்கும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்களை, தத்கல் சிறப்பு கட்டணத்துடன், இன்றும், நாளையும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என, கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை