Ad Code

Responsive Advertisement

பள்ளிக்கல்வித்துறையின் பணியாளர் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்து துறையின் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் இடையே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு முழு விபரம்-






*பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களின் நிறைவுரை விவரம்*


⭕அதிகாலை 12:32 மணிக்கு ஆரம்பித்து 12:58 மணிவரை பேசினார்.

⛔கல்வித்துறை செயலாளர் அவர்களை சரியாக தேர்ந்தெடுத்து நியமிக்கப்பட்டு உள்ளதால்  பள்ளிக்கல்வி துறை வளரும். 

⛔ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்

⛔தலைமைஆசிரியர் சிரமங்கள் குறைக்க 
14 வகையான நலத்திட்டங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கே வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 ⛔ பள்ளிக்கல்வித்துறை 
வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. 

 ⛔மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு ஒரு கோடியே 85 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் 

⛔ஜூன் மாதம் முதல் தினம்தோறும் இறை வணக்கக் கூட்டம் பள்ளி வளாகத்திலேயே (common prayer) நடைபெறும்.. 

⛔பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்தவர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் 

 ⛔ஸ்மார்ட் கார்டு  மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் இருக்கும். 

⛔ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடைபெறும்.

⛔தனியார் பங்களிப்புடன் கழிப்பறை பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

⛔ வகுப்பறை சுத்தம் செய்ய இரு வகுப்பறைகளுக்கு ஒருவர் வீதம் 100 நாட்கள் பணியாளர்கள் அமர்த்தப்படுவார்கள்.

⛔சென்னை, திருச்சியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லக்கட்டிடங்கள் வெகு விரைவில் திறக்கப்படும். மேலும் கோவை,மதுரை ஆகிய இடங்களில் ஆசிரியர் இல்லங்கள் கட்டப்படும்.

⛔ஆசிரியர்கள் பிரச்சனைகள் சார்ந்து அனைத்து ஆசிரியர்களும் AEEOவை தேடி செல்ல வேண்டியதில்லை. அதற்காக 5 பள்ளிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவர்.

⛔நிதி சார்ந்த கோரிக்கைகள் கல்வி மானியக் கூட்டத்திலும்,  ஊதியக்குழுவிலும் பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்கள்.

⛔எந்தவித புகாரும் இன்றி 4742 ஆய்வக உதவியாளர் நியமனங்கள் நடைபெற்றது போல ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு இவ்வாண்டு நடைபெறும்.

⛔நீட் தேர்வுக்கு தாயாராகும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் பாடதிட்டம் மாற்றியமைக்கப்படும். கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்ட உள்ளது 

⛔ பழுதடைந்த கணினிகளை பழுதுபார்த்து கணினி ஆசிரியர்களை அடுத்த ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

⛔ ஆழியாறு யோகா மையம் மூலம் 
யோகா பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  அளிக்கப்படும்.

⛔இந்தாண்டு முதல்
மாணவர் சேர்க்கை குறைபாடை நீக்கி அதிக மாணவர்கள் அரசுப்பள்ளியில் சேர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

⛔ 1 மாணவர்களுக்கு குறைந்த அளவில் மதிப்பெண் வைத்து பொதுத் தேர்வு நடத்தப்படும்.

⛔பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படும்

 ⛔அனைத்து வகைப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள்.

⛔போராட்டம் செய்யாமலேயே அனைத்து கோரிக்கைகளும் பேச்சுவார்த்தை
மூலம் தீர்வு காணப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement