Ad Code

Responsive Advertisement

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்., 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள் முடிந்து, 29 முதல் விடுமுறை விடப்படுகிறது. 

இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளன. சில பள்ளிகள், மதம் சார்ந்த வகுப்புகளும், சில பள்ளிகள், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு, சிறப்பு வகுப்பும் நடத்துகின்றன.

இதையடுத்து, 'எந்த பள்ளியும் கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார். இது குறித்து, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement