Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு

ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர்.

இதற்காக, ஆங்கில மொழி அறிவு உடைய ஆசிரியர்களை, புதிதாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, ஆங்கில திறன் கொண்டவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறை மாற்றப்பட உள்ளது. முதலில் போட்டி தேர்வுகளுக்கான, விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' மேற்கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது. அதேபோல், வரும் காலங்களில் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வையும், கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, மற்ற துறைகளுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை, கணினி வழி தேர்வாக மாற்ற, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement