Ad Code

Responsive Advertisement

பொது மாறுதல் கலந்தாய்வு- ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு....

🍏 *ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு*

🥀 2017-18 இல் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் புதிய விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து 05.05.17 மாலைக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

🥀 மாறுதல் கோரும் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

🥀 பட்டதாரி / இடைநிலை/உடற்கல்வி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்க ஒரே படிவத்தில் தேவையான மாறுதல் இனங்களில் ✔ (டிக்) குறியீடு இட்டு விண்ணப்பித்தல் வேண்டும்.


🥀 சிறப்பு முன்னுரிமை கோருபவர்கள் உரிய சான்றிதழ் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும். அசல் சான்றிதழை உ.தொ.க.அலுவலரிடம் காட்டி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

🥀 ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையத்தளத்தில 06.05.17 முதல் 10.05.17 வரை பதிவு செய்யப்படும். அதன்பின் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சார்ந்த ஆசிரியர்கள் 11.05.17 முதல் 13.05.17 வரை அலுவலகத்திற்கு நேரில் வந்து கையொப்பமிட்டு பெற்றுச் செல்ல வேண்டும். இந்த விண்ணப்பத்தையே ஆசிரியர்கள் கலந்தாய்வின்போது பயன்படுத்த இயலும். 

🥀 மனமொத்த மாறுதல் பெற 01.06.16 க்கு முன்னர் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும். 01.06.16 க்குப்பின் பணியேற்றவர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

🥀 ஏற்கனவே மனமொத்த மாறுதலில் சென்றவர்கள் மீண்டும் தான் பணிபுரிந்த பள்ளிக்கு மாறுதல் கோரி விண்ணப்பிக்க இயலாது.

🥀 கடந்த ஆண்டில் மனமொத்த மாறுதல் பெற்றவர்கள் இக்கல்வியாண்டில் விண்ணப்பிக்க இயலாது.

🥀 கணவர் அல்லது மனைவி 01.06.16 க்குப் பின் விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால் அதற்கான ஆதாரத்துடன் கலந்தாய்வு விதிகளைப் பின்பற்றாமல் சிறப்பு நிகழ்வாக கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

🥀 மாறுதல் கோருபவர்கள் 01.06.16 க்கு முன்பு தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். எனினும் 2016-17 இல் பணி நிரவல் பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்றவர்கள் 01.06.16 க்குப் பிறகு பணியில் சேர்ந்திருந்தாலும் தற்போதைய கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

🥀 முற்றிலும் கண்பார்வையற்றவர்கள், இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சை பெற்றவர்கள், டயாலிசிஸ் மேற்கொண்டவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள், இராணுவ வீரரின் மனைவி, விதவைகள் மற்றும் 40 வயதைக் கடந்த திருமணம் செய்யாதவர்கள், 40 % மற்றும் அதற்கு மேலும் உள்ள மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டியதில்லை. 01.06.16 க்குப் பின்னர் பணியில் சேர்ந்திருந்தாலும் இப்போது விண்ணப்பிக்கலாம்.

🥀. மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் spouse certificate வைப்பவர்கள் கணவர் அல்லது மனைவி 30 கி.மீ தூரத்திற்கு அப்பால் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.

🥀 கடந்த ஆண்டு spouse certificate மூலம் மாறுதல் பெற்றவர்கள் நடப்பாண்டில் spouse certificate மூலம் மாறுதல் கோர இயலாது. மாறுதல் பெற்று மூன்றாண்டுகளுக்குப் பின்னரே spouse certificate அடிப்படையில் மாறுதல் கோர இயலும்.

🥀 மத்திய / மாநில அரசு மற்றும் அதைச்சார்ந்த அலுவலர்கள்/ பணியாளர்கள் , அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் மட்டும் உரிய அலுவலரிடம் பணிச்சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

🥀 *மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை உதவி தொடக்கக் கல்வி அலுவகத்தில் 05.05.17 மாலைக்குள் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement