அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., வராத ரேஷன்கார்டுதாரர்கள், கடைகளில் 'ஸ்மார்ட்' கார்டுகளை வாங்க முடியாமல் அலைகின்றனர். தமிழகத்தில் 'ஸ்மார்ட்' கார்டுகள் ஏப்., 1 முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
கார்டு அச்சடிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்டோரின் அலைபேசி எண்ணுக்கு, ஓ.டி.பி., எனும் ரகசிய எண் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப் படும். ஒரு வாரத்திற்குள் அதை ரேஷன் கடைகளில் காண்பித்து, 'ஸ்மார்ட்' கார்டு பெற்று கொள்ளலாம்.தற்போது 20 சதவீதம் 'ஸ்மார்ட் கார்டுகளே ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிலும் பலருக்கு எஸ்.எம்.எஸ்., வரவில்லை. இதனால் அவர்களால் ஸ்மார்ட் கார்டு பெற முடியவில்லை.
வழங்கல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அலைபேசி எண்ணை மாற்றினாலும், பதிவு செய்யாமல் விடுபட்டுஇருந்தாலும் எஸ்.எம்.எஸ்., வராது. உணவு வழங்கல் பிரிவு முழுவதும் கணினிமயமாகி விட்டது. எஸ்.எம்.எஸ்., வராவிட்டால் கம்ப்யூட்டர் மையம் அல்லது 'இ-சேவை' மையங்களை நாட வேண்டும், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை